sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை

/

ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை

ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை

ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை


ADDED : மார் 06, 2024 05:59 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உணவு பொருள் வழங்கல் துறைக்கு 2 அமைச்சர்கள் உள்ளதாக சக்கரபாணி எம்.எல்.ஏ., செந்தில் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்த நல திட்ட பெயர் பலகை தி.மு.க.,வினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது .

அடியனுாத்து, தோட்டனூத்து, சிறுமலை, ஏ வெள்ளோடு ஊராட்சிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டா வழங்கும் விழா ,புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்லையடுத்த பொன்னகரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. அந்த பகுதியில் ஒரு பள்ளியின் சுவரை ஒட்டியவாறு மேடை அமைக்கப்பட்டு விழா நடந்தது. இதற்கான பல திட்ட பெயர் பலகையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொறிக்கப்பட்டு இருந்தது.

இதன் அருகில் குறிப்பிடப்பட்டிருந்த பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் அடுத்து உணவு வழங்கல் துறை அமைச்சர் என குறிப்பிடபட்டிருந்தது. இது ,கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது .இதை பத்திரிகையாளர்கள் படம் எடுக்க , பலகையில் தவறாக குறிப்பிட்டிருந்ததை கண்ட விழா ஏற்பாட்டாளர்கள் பலகையை மூடி மறைத்தனர்.






      Dinamalar
      Follow us