ADDED : டிச 19, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் 57.
2023ல் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுந்தர்ராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை . ரூ.50 ஆயிரம்அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார்.