ADDED : மார் 09, 2026 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 270 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் 38, என்பவரை கைது செய்தனர்.

