sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்

/

 நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்

 நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்

 நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்


ADDED : டிச 30, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: நகைக்கடையில், 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடிய ஊழியர்கள் மூவரை, போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வரதராஜ் காம்ப்ளக்சில் செயல்படும் நகைக்கடையில், திண்டுக்கல்லை சேர்ந்த ரேணுகேசன், 62, துணை பொது மேலாளராக உள்ளார்.

கடந்த டிச., 2ல் தரைத்தளத்தில் நெக்லஸ் பிரிவில், தங்க நகைகளை தணிக்கை செய்ததில், 1.5 கிலோ எடை கொண்ட, 45 தங்க நெக்லஸ்கள் மாயமானது தெரிந்தது. அதன் மதிப்பு ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய்.

ஊழியர்களிடம் ரேணுகேசன் நடத்திய விசாரணையில், தரைத்தளத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த போது, பொறுப்பு மேலாளராக இருந்த சிவா, 29, அதே தளத்தில் பணியில் இருந்த காசாளர் கார்த்திகேயன், 43, விற்பனையாளர் விநாயகன், 36, ஆகியோர், வாடிக்கையாளர்களுக்கு மாடல் காண்பிப்பதாக கூறி, நகைகளை எடுத்தது தெரிந்தது.

இதற்கு, காசாளர்கள் பாண்டியன், சரவணக்குமார், கார்த்திக், நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு, விற்று பணத்தை பங்கு போட்டதும் தெரிந்தது.

புகாரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து சிவா, கார்த்திகேயன், விநாயகன் ஆகிய மூவரை கைது செய்தனர். நான்கு ஊழியர்களை தேடுகின்றனர். 80 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us