/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
/
குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
ADDED : பிப் 17, 2026 07:09 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே உள்ள கே. ராஜதானிக்கோட்டையை சேர்ந்த மனோஜ்குமார் 27, எஸ்.தும்மலபட்டியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் 22, பள்ளப்பட்டியை சேர்ந்த மருதுபாண்டியன் 29, ராமன்செட்டிபட்டியை சேர்ந்த அரவிந்த் 26, முத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் 54 உள்ளிட்ட 5 பேரும் கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீசால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் 5 பேரையும் போலீசார் குண்டாஸில் சிறையில் அடைத்தனர்.

