/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிதி வராததால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; சொல்கிறார் தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்
/
நிதி வராததால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; சொல்கிறார் தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்
நிதி வராததால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; சொல்கிறார் தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்
நிதி வராததால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; சொல்கிறார் தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்
ADDED : பிப் 17, 2026 07:08 AM
சின்னாளபட்டி: 500 வாக்குறுதிகளில் 370ஐ மட்டும் மாநில அரசு நிறைவேற்ற முடிந்தது. மத்திய அரசிடமிருந்து நிதி வராத காரணத்தால் எஞ்சியவற்றை நிறைவேற்ற முடியவில்லை, என தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.
சின்னாளபட்டியில் அவர் கூறியதாவது:
5 ஆயிரம் ரூபாய் வழங்கும் முன்பே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 5 ஆண்டுகளாக கொடுத்து திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கானது என முதல்வர் ஸ்டாலின் நிரூபித்துள்ளார். பா.ஜ., அரசு வரும் தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளைப்புற வழியே நுழைவதற்காக எப்படியாவது எதையாவது செய்ய வாய்ப்புள்ளது.
அதற்கான வழக்கு தொடுக்கப்பட்டால் 3 மாத நிலுவைத் தொகை அப்படியே நின்று விடும் என்பதை முன்கூட்டியே அறிந்து அரசியல் சாணக்கியத்தனத்துடன் முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
காங்கிரசுடன் தோழமையில் உள்ள இயக்கம் தி.மு.க., கூட்டணி குறித்து தலைவர்கள் பேசி முடிவு செய்வர்.
பொது வெளியில் பயணிக்கும் பெண்கள் குறித்து தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்த கருத்துக்கள் கண்டனத்திற்குரியது என்றார்.

