sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து சிறுவன் உட்பட 7 பேர் பலி

/

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து சிறுவன் உட்பட 7 பேர் பலி

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து சிறுவன் உட்பட 7 பேர் பலி

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து சிறுவன் உட்பட 7 பேர் பலி


ADDED : டிச 13, 2024 03:09 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிறுவன் உட்பட ஏழு பேர் பலியாகினர்.

திண்டுக்கல் - திருச்சி சாலையில் சிட்டி மருத்துவமனை உள்ளது. நான்கு மாடிகள் கொண்ட மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளிகளாகவும் தினமும் பலர் வந்து செல்வர்.

நேற்று இரவு 9:30 மணிக்கு இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் இரண்டு லாரிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில், 100 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அருகில் வசிப்போர், காந்திஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நோயாளிகள் பலரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இருப்பினும் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது சிறுவன் உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்தனர். விபத்து ஏற்பட்டபோது லிப்டில் 6 பேர் சிக்கினர். மயக்க நிலையில் இருந்த அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த அமைச்சர் பெரியசாமி, கலெக்டர் பூங்கொடி உள்ளிட்போர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை வேகப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us