sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்கும் அறக்கட்டளை

/

 மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்கும் அறக்கட்டளை

 மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்கும் அறக்கட்டளை

 மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்கும் அறக்கட்டளை


ADDED : ஜன 05, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மக்கள் நல அறக்கட்டளை.

ஒட்டன்சத்திரம் பகுதியில் தன்னார்வல அமைப்புகள், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து பல வகையான மரங்கன்றுகளை நட்டு, வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றன. பல இடங்களில் மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து சிறு மரங்களாக வளர்ந்துள்ளதால், மரக்கன்றுகள் நடப்பட்ட அப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

மாசில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதில் மக்கள் நல அறக்கட்டளை பல முயற்சிகளை செய்துள்ளது. இதன் ஒரு அங்கமான பசுமை ஒடவை மூலம் குளக்கரைகளில் பனை விதைகளும், கிராமப் பகுதிகளில் பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளது. நடுவதுடன் நின்று விடாமல் அதனை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் குளக்கரைகளில் நடப்பட்ட பனை விதைகள் தற்போது மரங்களாக வளர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன. வருங்கால சந்ததியினரை காக்க வீடுகள் தோறும் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

குளக்கரையில் பனைவிதைகள் நடவு ரகுபதி, நிர்வாக இயக்குனர், மக்கள் நல அறக்கட்டளை : நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தால் அடுத்த தலைமுறையினர், காற்று மாசுபாடு இன்றி உடல் நலத்துடன் வாழ வழி ஏற்படும் என்பதை மனதில் வைத்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பனை விதைகள், வேம்பு உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். இதுவரை சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. எதிர்வரும் தலைமுறையினர் சுத்தமான காற்றை சுவாசிக்க இன்னும் அதிகமான மரங்கன்றுகளை நடவு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். மரங்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்வது குறித்து ஆரம்பப் பள்ளிகளில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். மரங்கன்றுகளை வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் நடக்கும் முக்கிய விழாக்களில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்கச் சொல்கிறோம்., என்றார்.

வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஸ்டாலின், உறுப்பினர், மக்கள் நல அறக்கட்டளை :

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து வீடுகளிலும் குறைந்த பட்சம் ஒரு நபருக்கு ஒரு மரம் என்ற கணக்கில் மரக்கன்று நட்டு பராமரித்தாலே எண்ணில அடங்கா பயன்கள் ஏற்படும். கொல்லப்பட்டி குளம், ஒட்டன்சத்திரம் சின்னக்குளத்தில் பனை விதைகள் நட்டுள்ளோம். பல கிராமங்களில் மரக்கன்றுகள், வேப்பம் விதைகள் நட்டுள்ளோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் தினத்தன்று திருமணம் ஆன புதிய மணமக்களை அழைத்து வந்து மரக்கன்றுகளை நடவு செய்து அறிவுறுத்தி வருகிறோம். அவ்வாறு மரக்கன்றுகள் நடவு செய்யும் புதுமணத் தம்பதியினருக்கு வீட்டில் நட்டு பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகளை கொடுத்து அனுப்புவதை வழக்கமாக செய்து வருகிறோம். மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து சுத்தமான காற்று சுவாசிக்கும் நிலை ஏற்படும். மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பெரிதாக வளர்வதை பார்த்தாலே மனதில் உற்சாகம் பீறிட்டு எழும். இது என்னுடைய மரம் இதை நான் பாதுகாப்பாக வளர்ப்பேன் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்., என்றார்.






      Dinamalar
      Follow us