sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்

/

அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்

அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்

அய்யலுாரில் குவிந்த பந்தய சேவல்கள்


ADDED : அக் 31, 2024 03:31 AM

Google News

ADDED : அக் 31, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் நேற்று விற்பனைக்கு வந்த பந்தய சண்டை சேவல்களின் விலை தலா ரூ.30 ஆயிரம் வரை இருந்தது.

வடமதுரை அய்யலுாரில்வியாழக்கிழமைகளில் நடக்கும் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனை என தனி அடையாளம்பெற்றது. தீபாவளி வியாழக்கிழமை வந்ததால் சந்தை ஒருநாள் முன்னாக நேற்றே கூடியது. இதனால் வியாபாரிகள் பலரும் நேற்றுமுன்தினம் இரவு முதலே ஆடு, நாட்டுக்கோழிகள், சண்டை சேவல்களுடன் குவிந்தனர்.

இரவு முழுவதுமே வியாபாரம் நடந்தது. இங்கு ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்காககொண்டு வரப்பட்டிருந்தது. தலா ரூ.30 ஆயிரம்வரை அதன் விலை இருந்தது.

வியாபாரிகள் கூறுகையில் ''பந்தய சேவல் விஷயத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவோர் பலர் உள்ளனர். இதே வகை சேவல் சண்டை பந்தயங்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பரவலாக நடக்கிறது.

இவற்றை வாங்க அதிகமாக வெளிமாநில வியாபாரிகளும் வருகின்றனர். இதனால் வடமதுரை சுற்றுப்பகுதியில் பகுதியில் பந்தய சண்டை சேவல் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. ஒரு வீட்டில் பத்து சேவல்களை வளர்த்து பயிற்சி தந்தால், ஆறே மாதங்களில் ரூ.1.50 லட்சம் வரை எளிதாக லாபம் சம்பாதிக்க முடியும்''என்றனர்.






      Dinamalar
      Follow us