/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை ஒருவருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு தொல்லை ஒருவருக்கு ஆயுள்
ADDED : ஜன 31, 2025 02:11 AM
திண்டுக்கல்:பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுந்தரம் 55. அதே பகுதியை சேர்ந்தவர் தேவா 21. இருவரும் 2023 ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தனர். அதை வீடியோவும் எடுத்தனர். மயக்கம் தெளிந்த சிறுமியிடம் வீடியோவை காண்பித்து மிரட்டி உள்ளனர். பழநி மகளிர் போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், தேவாவிற்கு 6 ஆண்டு சிறை ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.