sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

/

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி


ADDED : பிப் 04, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு கோயிலில் பெண் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் 27.இவர் கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாணார்பட்டி அருகே புங்கம்பாடியை சேர்ந்த சரண்யாக்கும் காதல் ஏற்பட்டது. கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றபின்பும் தொலைபேசியில் காதலை தொடர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் நாடு திரும்பிய பாஸ்கர் நேற்று புங்கம்பாடி வந்தார். இருவரும் வெளியே சுற்றி விட்டு வீடு வந்துள்ளனர். இதையறிந்த புங்கம்பாடியில் கணவருடன் வசிக்கும் பாஸ்கரின் சகோதரி கண்டித்துள்ளார். இதனால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காதல் ஜோடி சாணார்பட்டி மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது.

பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us