sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு

/

தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு

தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு

தாண்டிக்குடியில் அரை குறையாக அமைத்த தார்ரோடு


ADDED : மார் 11, 2024 06:47 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணி அரைகுறை நிலையில் விடப்பட்டதால் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மங்களகொம்பு கானல்காடு இடையே கடந்த ஒரு மாதமாக தார் ரோடு அமைக்கும் பணி நடக்கின்றது. ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. ஒரு புறமாக ரோடு அமைத்து எஞ்சிய பகுதி வாரக் கணக்கில் ரோடு அமைக்காததால் இதில் செல்லும் டூவீலர் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இது போன்ற அரைகுறை நிலையில் விடப்பட்ட ரோட்டால் இதுவரை ஏராளமானோர் விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை ரோடு பணிகளை முழுமை பெறாது மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இருந்தபோதும் நாள்தோறும் விபத்துகள் நடப்பது கவலையளிக்கிறது. பாதியில் விடப்பட்ட ரோடை முழுமையாக தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவி செயற்பொறியாளர் ராஜன் கூறுகையில்: ஒரு வழி பாதை கொண்ட மலை ரோட்டில் தற்போது ஒரு பக்கமாக ரோடு அமைக்கப்பட்டது. ரோடு முழுமை பெறாத நிலையில் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது குறித்து ஒப்பந்ததாரிடம் கூறப்பட்டது. இரு தினங்களில் ரோடு பணிகள் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us