sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

/

 பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

 பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

 பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்


ADDED : நவ 25, 2025 11:48 PM

Google News

ADDED : நவ 25, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: பா.ஜ., ஒன்றிய தலைவரின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி, 24.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த காஞ்சிபுரம் வாலிபரை, ஓராண்டிற்கு பின், போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பா.ஜ., ஒன்றிய தலைவர் வீரப்பன், 43. இவர், டிப்ளமா படித்த தன் மகன் செல்லப்பாண்டிக்கு அரசு வேலை வாங்க, நண்பரான திண்டுக்கல், மேட்டுப்பட்டி சரவணனை அணுகினார்.

அவர், 'பொதுப்பணித்துறையில் வேலை வாங்கலாம்' எனக்கூற, வீரப்பன், 16 லட்சம் ரூபாயை சரவணனிடமும், சின்ன காஞ்சிபுரம், பெரியகோட்டை கவுரிசங்கர், 32, என்பவருக்கு 3 லட்சம் உட்பட ஐந்து பேருக்கு, 24.30 லட்சம் ரூபாய் கொடுத்தார். திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் பெயரில், போலி பணி நியமன உத்தரவை சரவணன் தயார் செய்து, வீரப்பனுக்கு அனுப்பினார். பணியில் சேர சென்றபோது, அது போலி உத்தரவு என்பது தெரிந்தது.

இதுதொடர்பான புகாரில், 2024 ஆகஸ்டில் சரவணனை வடமதுரை போலீசார் கைது செய்தனர். நேற்று கவுரிசங்கர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us