sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

/

ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஆக 02, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்க்ல மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து,விளக்கேற்றி பெண்கள் தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி 3ம் வெள்ளி என்பதால் நேற்று அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது.

சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 :00 மணிக்கு அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 6 :00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.

ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து தரிசனம் செய்தனர். கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், நத்தம் ரோடு, அஷ்டலட்சுமி மலையடிவாரம் பத்திரகாளியம்மன், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில் ,ஜான்பிள்ளை சந்து அபிராமியம்மன் கோயில் , தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி, கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன் என மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நத்தம் : மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். கம்பிளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோயில், பகவதி அம்மன்,காளியம்மன், தில்லைகாளியம்மன், வாராஹி அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சிவகிரிபட்டி உச்சி காளியம்மன் கோயில், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரணகாளியம்மன் கோயில், கச்சேரி வீதி கூன காளியம்மன் கோயில் அ.கலையமுத்துார், அக்ரஹாரம் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன் கோயில், பெரிய கலைய முத்துார் ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

சின்னாளபட்டி : சின்னாளபட்டி கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. மண் பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ் நேற்று காலை கரைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனி, செக்கடி தெரு, சமயபுரம் மாரியம்மன், வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us