sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை

/

பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை

பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை

பழநி முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை


ADDED : ஆக 17, 2025 12:32 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயிலில் நடந்த ஆடி கார்த்திகையில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பழநி முருகன் கோயிலில் ஆடி மாத கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்க மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர்.

பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக படிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக செயல்படாததால் வின்ச் ஸ்டேஷனில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலை நேரத்தில் பழநி பஸ் ஸ்டாண்டில் அதிக பக்தர்கள் பஸ்சுக்கு காத்திருந்தனர்.

மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை, சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள தங்கரத புறப்பாடு நடந்தது.

இது போல் திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஒ.,காலனி முருகன் கோயில், அபிராமியம்மன் கோயில்,கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில்,ரயிலடி விநாயகர் கோயில்,நாகல்நகர் பாலமுருகன் கோயில். அனைத்து கோயில் முருகன் சன்னதியில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.






      Dinamalar
      Follow us