திண்டுக்கல் : ஆவணிஅமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன.
திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன், அபிராமி அம்மன் கோயில், கோட்டைமாரியம்மன் என்.ஜி.ஓ., காலனி முனீஸ்வரர் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடந்தது. கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
நத்தம் : அரண்மனை சந்தனகருப்புசுவாமி கோயிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்ய பால்,பழம், பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை , பூஜை நடந்தது.
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை ,தீபாராதனை நடந்தது. கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி : அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பூஜைகள் , கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் அடிவாரம் மலை குகை கோயில் , தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீாராதனைகள் நடந்தது.