ADDED : அக் 03, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் எரியோடு மந்தனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் 36. 2013ல் நடந்த திருட்டு வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வந்தவர், 12 வருடங்களாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், திண்டுக்கல் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.