ADDED : ஜன 30, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்து தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல் பகுதி வணிக, உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
குடியரசு தினம் போன்று பொது விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு உட்படுத்துதல் உட்பட்ட பிரிவில் 61 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையொட்டி அரசு ஒப்பந்தம், இதர பணிகளில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது என கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற உதவி ஆய்வாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.