sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் கூடுதலாக வாகன நிறுத்தம் அமைப்பு

/

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் கூடுதலாக வாகன நிறுத்தம் அமைப்பு

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் கூடுதலாக வாகன நிறுத்தம் அமைப்பு

பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள் கூடுதலாக வாகன நிறுத்தம் அமைப்பு


ADDED : டிச 01, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 01, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த கூடுதலாக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

பழநி முருகன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தரின் வருகை அதிகரித்து இருக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை உள்ளது.

பழநி கோயில் நிர்வாகம் சார்பில் இலவச சுற்றுலா வாகன நிறுத்தங்கள், அருள்ஜோதி வீதி , கிழக்கு கிரிவீதி பகுதியில் மட்டும் உள்ளது.

தற்போது ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன நிறுத்தங்களின் போதிய இடம் இல்லை.

இதனால் அருள் ஜோதி வீதி, பூங்கா ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் ,போலீசார் இணைந்து கொடைக்கானல் செல்லும் சாலை அருகே தற்காலிக வாகன நிறுத்தத்தை அமைத்துள்ளனர்.

ஆனால் அதில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை.

இரவு நேரங்களில் எரியும் விளக்குகள் மட்டும் உள்ளன. வாகனங்கள் வெளியேறும் பாதை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் இல்லை. மேலும் துாய்மை பணிகள் நடக்காததால் தற்காலிக வாகனம் நிறுத்தம் குப்பைமேடு போல் உள்ளது. இதுன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us