/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., அன்னதானம்
/
ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., அன்னதானம்
ADDED : டிச 12, 2024 05:59 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினரால் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
இதோடு கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்களின் சார்பில் 108 பால்குடங்கள் எடுக்கப்பட்டு சிறப்பு வழிபாடு,அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., .பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கத் தேரை இழுத்தனர். ஒன்றிய செயலாளர்கள் ,சுப்பிரமணி,மலர்வண்ணன் , அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, இணைச் செயலாளர் ராமமூர்த்தி ,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சின்னு, பகுதி செயலாளர்கள் மோகன், சேசு,சுப்பிரமணி, முரளி, வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்ஜெயபாலன், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கதுரை, பேரூர் செயலாளர்கள் பாபு , இ.பி.முத்தையா ,ஜெயசீலன் , ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் முனிசாமி, மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அழகு மணிகண்டன்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், வடக்குப்பகுதி இளைஞர் பாசறை செயலாளர் செந்தில், கிழக்கு பகுதி வ துனை செயலாளர் கார்த்தி ,வடக்குப் பகுதி அம்மா பேரவை இணை செயலாளர் பழனிச்சாமி, தெற்கு பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் பாண்டி பாவா, கார்த்தி,கோபி இளையராஜா ,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கணேசன்,கண்ணன் கலந்து கொண்டனர்
ஆத்துார் : ஆத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பித்தளைப்பட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காந்திகிராமம் கஸ்துாரிபா அறக்கட்டளை சவுபாக்கியா குழந்தைகள் காப்பகம், வக்கம்பட்டி அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேற்கு ஒன்றிய செயலாளர் மணலுார் சின்னச்சாமி தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி அன்னதானத்தை துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் சுகன், வர்த்தக அணி செயலாளர் கிரஷர் எம்.பாலு, ஒன்றிய பொருளாளர் பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மணிமாறன், மேற்கு ஒன்றிய பொருளாளர் அந்தோணிராஜ், ஜெ., பேரவை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், என்.பஞ்சம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.
அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில் காந்திகிராம அறக்கட்டளையின் சவுந்தரம் ஆதரவற்றோர் இல்லத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாணவரணி செயலாளர் கோபி தலைமையில் அன்னதானம் நடந்தது.
கன்னிவாடி:ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அம்மனுக்கு திரவிய அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்படட்டிருந்தது. விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாச்சலம், மீனவரணி இணை செயலாளர் சின்னையா, கோட்டைப்பட்டி பாலு, சதாம் உசேன், பண்ணைப்பட்டி தெய்வேந்திரன் பங்கேற்றனர்.
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஸ்ரீராமபுரம் பேரூர் செயலாளர் பாபு, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பெருமாள், மாணவரணி செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் பொன்னுச்சாமி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., துணை பொது செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கே.சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர்கள் இளம்வழுதி, வர்த்தக அணி நிர்வாகிகள் கிரசர் பாலு, இணைச் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் ஹரிகரன், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் செடிப்பட்டி ஆண்டிச்சாமி, சின்னச்சாமி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், குணசேகரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ்பாபு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.டி.அந்தோணி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்கள் செடிப்பட்டி சக்திவேல், நாகம்மா கோயில் செல்வம், மகேந்திரன், அய்யாபட்டி சீனிவாசன், நத்தம் தொகுதி இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொன் மணிகண்டன், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் முகமது பாரூக், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சந்திர போஸ், எல்லைப்பட்டி கிளைச் செயலாளர் ராஜசேகர், சோத்தாம்பட்டி கிளைச் செயலாளர் சோக்கு , அ கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் முருகன், செடிப்பட்டி அழகர்சாமி, மீனவர் அணி துணைச் செயலாளர் மதுரை வீரன் வாழ்த்து தெரிவித்தனர்.