sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அ.தி.மு.க., கூட்டணிக்கு வர யார் பணம் கேட்டார்கள்; பகிரங்கமாக கூற முடியுமா பாலகிருஷ்ணன் கேள்வி

/

அ.தி.மு.க., கூட்டணிக்கு வர யார் பணம் கேட்டார்கள்; பகிரங்கமாக கூற முடியுமா பாலகிருஷ்ணன் கேள்வி

அ.தி.மு.க., கூட்டணிக்கு வர யார் பணம் கேட்டார்கள்; பகிரங்கமாக கூற முடியுமா பாலகிருஷ்ணன் கேள்வி

அ.தி.மு.க., கூட்டணிக்கு வர யார் பணம் கேட்டார்கள்; பகிரங்கமாக கூற முடியுமா பாலகிருஷ்ணன் கேள்வி


ADDED : நவ 23, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 23, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''அ.தி.மு.க., கூட்டணிக்கு வர யார் பணம் கேட்டார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடியுமா,'' என, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: அதானி ரூ.2200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றார் என்பது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றம் அதானி உட்பட 7 பேர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டைகண்டுபிடிக்கவில்லை. மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டும். முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிக்கூடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.,வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க, தோல்விக்கான காரணம் சரியான கூட்டணி இல்லாதது தான். பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு அ.தி.மு.க., போனால் அக்கட்சி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திருச்சியில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணிக்கு வருபவர்கள் பணம் கேட்பார்கள், சீட்டு கேட்பார்கள் என பொதுவாக சொன்னால் இதற்கு என்ன அர்த்தம். உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

ஏன் தயங்குகிறீர்கள். பொதுவாக சொன்னால் எப்படி நம்பகத் தகுந்ததாக இருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us