/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது வேண்டாமே; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது வேண்டாமே; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது வேண்டாமே; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ரோட்டோரங்களில் விளம்பர பேனர்கள் வைப்பது வேண்டாமே; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : நவ 25, 2024 05:53 AM

மாவட்டத்தில் நான்கு வழி சாலை, நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என அனைத்து ரோட்டோரங்கள், தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களால் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சில இடங்களில் இருந்த மெகா விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
இருந்த போதும் பல இடங்களில் இருக்கும் விளம்பர பேனர்கள் அகற்றப்படாததால் அவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரபேனர்களை முறையாக பராமரிப்பது இல்லை. அவை சேதமடைந்து கிழிந்து காற்றில் பறப்பதால் ரோடுகளில் செல்லும் வாகனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது போன்ற விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.