ADDED : மார் 17, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
தாசில்தார் சுகந்தி தலைமை வகித்தார் . பரளி-புதுார் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருவதால் அதை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பதிலளித்த சுங்கச்சாவடி அலுவலர்கள் ,டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பபட்டு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.

