/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு பிறகு தி.மு.க., 200 தொகுதி முழக்கம் மாயம் சொல்கிறார் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன்
/
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு பிறகு தி.மு.க., 200 தொகுதி முழக்கம் மாயம் சொல்கிறார் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன்
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு பிறகு தி.மு.க., 200 தொகுதி முழக்கம் மாயம் சொல்கிறார் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன்
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு பிறகு தி.மு.க., 200 தொகுதி முழக்கம் மாயம் சொல்கிறார் பா.ஜ., பொது செயலாளர் சீனிவாசன்
ADDED : ஜூலை 22, 2025 04:12 AM
திண்டுக்கல்: ''அ.தி.மு.க., --பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகு தி.மு.க., வின் 200 தொகுதி முழக்கத்தை காணவில்லை,'' என,திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் சாடினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க.,வின் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இதற்கு முன் ஓ.டி.பி., எண் பெறப்பட்டதன் மூலம் எந்த தவறும் நடக்காமல் இருக்க தி.மு.க., உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை சிலர் எதிர்பார்க்கவில்லை. இக்கூட்டணி அமைவதற்கு முன் 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றிப் பெறும் என முழக்கமிட்டனர். தற்போது அதனை தவிர்த்து விட்டனர். அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என தி.மு.க., எதிர்பார்த்துள்ளது.
பா.ஜ.,க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அ.தி.மு.க., வுக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமியும் தலைவர்களாக உள்ளனர்.
கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா, வெளியில் இருந்து ஆதரவா என்பதையெல்லாம் தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும். தற்போது பேச வேண்டியதில்லை. அவர்கள் இருவர் சொல்வதை இரு கட்சியினரும் ஏற்றுக் கொள்வோம்.
நாங்கள் ஏமாளிகள் அல்ல என பழனிசாமி அவர்களது தொண்டர்களுக்காக கூறியிருக்கிறார். அ.தி.மு.க., தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி, பழனிசாமி தான் முதல்வர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தி.மு.க., விற்கு எதிரான ஓட்டு சிதற கூடாது என்பதற்காக தி.மு.க.,விற்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கிறோம். நடிகர் விஜய், சீமான் ஆகியோரை இக்கூட்டணிக்கு வரவேற்கிறோம்.
ஆனால் தி.மு.க., வீழ்த்த வேண்டும் என்பதே ஒற்றை இலக்கோடு செயல்பட வேண்டும். பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகிவிட்டனர்.
அ.தி.மு.க., திசை மாறி செல்கிறது என முன்னாள் எம்.பி., அன்வர் ராஜாவின் முடிவு எங்கிருந்தோ எடுக்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு எங்கிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை. அதனை அவர் செயல்படுத்துகிறார் என்றார்.