ADDED : பிப் 12, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தனியார் மண்டபத்தில் மதுரை வேளாண் பல்கலை சமுதாயக் கல்லுாரி - ஆராய்ச்சி நிலையம் சார்பில் 'விவசாயத்தில் பெண்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
திண்டுக்கல் துணை கலெக்டர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இதில் அவர் பேசியதாவது, ''விவசாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து உணர வேண்டும். பெண்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை மதிப்புக்கு லாபம் அடைய முயற்சி செய்ய வேண்டும்.'', என தெரிவித்தார்.
இதில் பெண் தொழில் முனைவோர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் மதிப்பு கூட்டிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சமுதாய கல்லுாரி முதல்வர் காஞ்சனா, பல்கலை பேராசிரியர்கள் சசிதேவி, குரு மீனாட்சி, முரளிதரன் உட்பட பங்கேற்றனர்.

