/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., நடத்திய கபடி போட்டி அரியலுார் -அணி வெற்றி
/
அ.தி.மு.க., நடத்திய கபடி போட்டி அரியலுார் -அணி வெற்றி
அ.தி.மு.க., நடத்திய கபடி போட்டி அரியலுார் -அணி வெற்றி
அ.தி.மு.க., நடத்திய கபடி போட்டி அரியலுார் -அணி வெற்றி
ADDED : மே 08, 2025 03:46 AM

நத்தம்: நத்தத்தில் நகர அ.தி.மு.க., சார்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்கள் , பெண்களுக்கான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் அரியலுார்- அணி வெற்றி பெற்றது.
50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இதில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நத்தம் மதுரம்- சிட்பண்ட்ஸ் அணி, 2-ம் பரிசை சேர்வீடு வி.கே.பி.அணி , 3-ம் பரிசை மதுரை பழக்கடை அணி , 4-ம் பரிசை கல்வேலிபட்டி வல்லடியார் வாரியர்ஸ் அணி , பெண்கள் பிரிவில் முதல் பரிசை அரியலுார்-அணி , 2-ம் பரிசை மதுரை- வண்டியூர் அணி , 3-ம் பரிசை சேர்வீடு அணி , 4-ம் பரிசை கள்ளக்குறிச்சி அணி வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பரிசு , கோப்பை வழங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், தொழிலதிபர் அமர்நாத்,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி,எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் குப்பான் கலந்து கொண்டனர்.