ADDED : அக் 18, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: பழநி கோம்பைபட்டி பகுதியில் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் மாடு வளர்த்து வருகிறார்.
அதன் உணவுக்காக மக்காச்சோள மாவை வீட்டின் முன்பு மூடைகளில் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மக்காச்சோள மாவு சிதறி இருந்தது.
அங்கு சுற்றித் திரியும் ஒற்றை யானை வீட்டில் இருந்த மூன்று மூடை மக்காச்சோளம் மாவை சாப்பிட்டது தெரியவந்தது.