sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது

/

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது

 அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; 750 பேர் கைது


ADDED : ஜன 21, 2026 06:05 AM

Google News

ADDED : ஜன 21, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று(ஜன.20) முதல் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளனர்.

இதன் தொடக்கமாக திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரி முன்னிலை வகித்தார், பொருளாளர் முருகவள்ளி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி, மாவட்ட செயலாளர் சுகந்தி, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம், சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மணிக்காளை பேசினர். இதன் பின் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வரை ஊர்வலமாக சென்று மறியல் செய்தனர். பெண்கள் 720, ஆண்கள் 30 என 750 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us