ADDED : ஜூலை 01, 2026 12:42 AM
அ நிறம் | அளவு
பழநி: ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ஜூன் 28 உச்சிகால பூஜையில் ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது.
நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் சாயரட்சை பூஜை வேளையில் கும்ப கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. பூஜித்த நீரால் சாயரட்சை பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று(ஜூலை 1) பெரியாவுடையார் கோயிலில் உச்சிகால பூஜையில் அன்னாபிஷேத்துடன் நிறைவு பெறுகிறது.
