ADDED : மார் 21, 2026 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளனம்பட்டி: திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி., காலனி திருஇருதய கலை அறிவியல் கல்லுாரியில் 13வது ஆண்டு விழா நடந்தது. செயலர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா ஆண்டறிக்கை வாசித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட்ராஜ் வரவேற்றார். திருஇருதய சபை தலைவர் விக்டர்தாஸ் பேசினார்.
சபை பொதுச்செயலர் டென்னிஸ் மைக்கேல், பொது நிதியர் ஆல்பர்ட் சேவியர், பாதிரியார் ஞானப்பிரகாசம் பங்கேற்றனர்.
பல்கலை அளவில் உளவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி ஷர்மிளா, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி ஏற்பு ஆணை வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் கீதா நன்றி தெரிவித்தார்.

