/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை
/
ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை
ADDED : மார் 21, 2026 07:29 AM

செம்பட்டி: ரம்ஜானை முன்னிட்டு செம்பட்டி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை ரூ. 2 கோடியை கடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வெள்ளிக்கிழமையன்று சந்தை நடக்கிறது.
மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை விற்பனையும் நடக்கும். சுற்று கிராமங்கள், வெளி மாவட்ட வியாபாரிகளும் ஆடுகள், தோல் வாங்க வருவது வழக்கம்.
நேற்று நடந்த சந்தைக்கு செம்பட்டி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு சுற்றிய கிராமங்களில் இருந்து கால்நடை வளர்ப்போர் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளாடு, செம்மறி, குறும்பாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்த நிலையில் அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் என பலரும் திரண்டனர்.
இன்று ரம்ஜான் என்பதால் 10 கிலோ குட்டிகள் முதல் அதிக எடை ஆடுகள் வழக்கத்தை விட 20 சதவீதம் கூடுதலாக விலை அதிகரித்து விற்பனை ஆனது. இதனால் விற்பனை ரூ. 2 கோடியை கடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

