ADDED : செப் 20, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நிலக்கோட்டை விளாம்பட்டி நாட்டார்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் திண்டுக்கல் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்தமனுவில் நாட்டார்பட்டியில் ஏழைக்காத்தஅம்மன், ஸ்ரீ வல்லடிகாரர் கோயில்கள்உள்ளது.
இக்கோயிலில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பூஜாரியாக இருந்தார்.
4 வருடத்திற்கு முன் அவர் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து மற்றொருவர் பூஜாரியாக நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே பூஜாரியாக இருந்து விலகிச் சென்றவரின் குடும்பத்தினர் மீண்டும் எங்கள் குடும்பத்தினர் தான் பூஜாரியாக இருந்து திருவிழா நடத்த வேண்டும்.
இல்லையென்றால் திருவிழா நடத்த அனுமதிக்க மாட்டோம் என பிரச்னை செய்கின்றனர். பிரச்னை இல்லாமல் திருவிழா நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.