sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு

/

பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு

பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு

பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு


ADDED : செப் 30, 2025 04:31 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் நாளை (அக்.1) -அம்பு எய்தல் நடக்கும் நிலையில் மதியம் 3:00 மணிக்கு முருகன் கோயில் நடை அடைக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்.22 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை (அக் .1) விழா நிறைவடையும் நிலையில் பழநி முருகன் கோயில் செல்லும் பக்தர்கள் காலை 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை , மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை பின் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது. இதையொட்டி மதியம் 3:00 மணிக்கு முருகன் கோயில் நடை அடைக்கப்படுகிறது.

தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் முத்துக்குமாரசுவாமி கோதை மங்கலம் கோடீஸ்வரர் கோயில் முன்பு வன்னிகாசூரன் வதத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய வேல் முருகன் கோயில் செல்கிறது.

அங்கு அர்த்த சாம பூஜை நடைபெற, நாளை மறுநாள் (அக்.2) பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நவராத்திரி விழாவை முன்னிட்டு நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு அக்.2 முதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us