ADDED : நவ 19, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுன்றன.அதன்படி திண்டுக்கல் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நேற்று நடைபெற்றன. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் புனித லுார்தன்னை பள்ளியில் நடந்த தொடக்க விழாவில் மேயர் இளமதி தொடங்கி வைத்தார். முதல் இடத்தை பிடிக்கும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.