ADDED : ஏப் 20, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை, கோவில்பட்டி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி, தெரு விளக்குகள், சரிபார்ப்பு,குடிநீர் குழாய்களில் தண்ணீர் விநியோகம் ,குப்பை சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ரா மேரி உடனிருந்தனர்.

