ADDED : ஜூலை 05, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி அருகே சுற்றுலா வேன் மோதியதில் தனியார் கல்லுாரி துணைப்பேராசிரியர் பலியானார்.
காந்திஜி நகரில் வசிப்பவர் அய்யலுார் தனியார் கல்லுாரி துணை பேராசிரியர் அஜித்குமார் 24. டூவீலரில் வேடசந்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலை 12:30 மணிக்கு திண்டுக்கல் நோக்கி சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே நான்கு வழி சாலையை குறுக்காக கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திருநெல்வேலி செல்வன் ஒட்டி வந்த சுற்றுலா வேன் மோதியதில் அஜித்குமார் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.