/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்
/
குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்
ADDED : அக் 10, 2025 03:20 AM
ஆத்துார்: ஆத்துார் பாசனக் குளங்களுக்கான நீர்வரத்து தொடரும் நிலையில் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரத்து குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சித்தரேவு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மணலுார், புல்லாவெளி பகுதியில் சில வாரங்களாக பனி, வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. குறிப்பிடத்தக்க மழை இல்லை.
இவற்றை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2022ல் 4 முறையும், 2023ல் 5 முறையும், 2024ல் 4 முறையும் நிரம்பி மறுகால் சென்றது.
தற்போது வாய்க்காலின் சொற்ப வரத்து நீர், விவசாய பாசன குளங்களுக்கு செல்கிறது. பாசன வெளியேற்றத்தில் ஒரு பகுதி கருங்குளம், நடுக்குளம் வழியே செல்கிறது. அதே வேளையில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க வாய்க்காலில், வரத்துநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
கூழையாறு, சிற்றாறுகளின் நீர்வரத்தும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. 5 மாதங்களாக குறைய துவங்கிய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 2.5 அடியாக இருந்தது.