sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குழந்தைகள் கடத்தல் வதந்திகளால் மனநலம் குன்றியவர் மீது தாக்குதல்

/

குழந்தைகள் கடத்தல் வதந்திகளால் மனநலம் குன்றியவர் மீது தாக்குதல்

குழந்தைகள் கடத்தல் வதந்திகளால் மனநலம் குன்றியவர் மீது தாக்குதல்

குழந்தைகள் கடத்தல் வதந்திகளால் மனநலம் குன்றியவர் மீது தாக்குதல்


ADDED : மார் 06, 2024 05:56 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : மர்ம கும்பல் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவிய நிலையில் வடமதுரை கொம்பேறிபட்டியில் சந்தேக வாலிபர் ஒருவர் சுற்றி திரிய, அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட கொம்பேறிபட்டி மக்கள் அவரை தாக்கி போலீசாருக்கும் தகவல் தந்தனர். போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. காயமடைந்திருந்த அந்த வாலிபரை சிகிச்சைக்கு அனுப்ப 108 ஆம்புலன்ஸ் சேவையை வரவழைக்க அப்பகுதியினர் சிகிச்சைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடமும், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆம்புலன்ஸ் வெறுமனே திரும்பி சென்றது. மக்கள் தாக்கியதால் சேர்ந்து காணப்பட்ட அவருக்கு இரக்கம் கொண்ட சிலர் நீர், டீ , பிஸ்கட் தந்து ஆசுவாசப்படுத்தினர்.

இதையடுத்து எஸ்.ஐ.,க்கள் சித்திக், ராஜலிங்கம், கிருஷ்ணவேனி, ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் வேறொரு 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்கு பிறகு மனநல காப்பகத்தில் சேர்ப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் இதன் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து, குழந்தைகளை கடந்த வந்த நபர் பிடிபட்டதாக அலைபேசிகளில் தகவல் பரப்பினர். வருவாய்த்துறை ஊழியர்கள் விளக்கம் வெளியிட்டு வதந்தி பரவுவதை குறைக்க முயன்றனர். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்கைகள் கடத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்தவரை போலீசார் செய்தனர். இது போல் கொம்பேறிபட்டியில் தவறான தகவல் பரப்புவோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவற்றை கட்டுபடுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.






      Dinamalar
      Follow us