sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

யானை தந்தத்தை விற்க முயற்சி: 7 பேர் கைது

/

யானை தந்தத்தை விற்க முயற்சி: 7 பேர் கைது

யானை தந்தத்தை விற்க முயற்சி: 7 பேர் கைது

யானை தந்தத்தை விற்க முயற்சி: 7 பேர் கைது


ADDED : பிப் 01, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் யானை தந்தத்தை விற்க முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் பன்றிமலை அருகே பலாப்பழம் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் இங்கு 2 யானைகள் சண்டையிட்ட நிலையில் ஒரு யானையின் தந்தம் உடைந்து கீழே கிடந்தது. இதை கவனித்த பெருமாள், இதுகுறித்து நண்பர்கள் சிறுமலையைச் சேர்ந்த ஜெயக்குமார், வெங்கடேசனிடம் தெரிவித்தார். பிறகு மூவரும் யானை தந்தம் விற்கும் புரோக்கர்கள் சிலுவத்துாரைச் சேர்ந்த பிரபு, கோபால்பட்டி சேகர், நத்தம் ரெங்கராஜ், கேராளவைச் சேர்ந்த ஜோஷியை நாடினர்.

இந்த தகவல் மதுரை வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. யானை தந்தத்தை வாங்குவது போன்று இக்கும்பலிடம் அலைபேசியில் வனத்துறையினர் பேசினர். அதை நம்பி அக்கும்பல் திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சஓடைப்பட்டி அருகே காரில் கொண்டு வந்தனர். அப்போது சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வனவர் அப்துல்ரகுமான் தலைமையிலான வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். யானை தந்தம், கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us