ADDED : அக் 26, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேடசந்துார் தீயணைப்பு துறையினர் சார்பில் வடகிழக்கு பருவ மழை நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வது, தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள் பிரகாஷ் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் நிர்மலா, உதவி தலைமைஆசிரியர் நாகஜோதி முன்னிலை வகித்தனர்.