ADDED : ஜன 05, 2026 05:53 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
இப்போட்டி பழநியாண்டவர் கலைப் பண்பாட்டுக் கல்லுாரியில் இருந்து துவங்கியது. டி.எஸ்.பி., தனஞ்ஜெயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பெரியவர்களுக்கு 12 கி.மீ., சிறியவர்களுக்கு 5 கி.மீ., என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் பழநி நகரை சுற்றி ஓடி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சரவணப் பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், தி.மு.க., நகரச் செயலாளர் வேலுமணி, பி.பி.என்., மருத்துவமனை விமல் குமார், சாய் மருத்துவமனை சுப்புராஜ், திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக், கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
