/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : ஜன 02, 2024 06:05 AM

நத்தம்; நத்தம் செந்துறை அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் 12- ம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேகம்,தீபாராதனை, பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் ,தீபாராதனை நடைபெற்றது. அய்யனார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் ,தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இருமுடி கட்ட இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐயப்பன ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி பூக்குழி இறங்க சிறுவர்கள் முதல் 100க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மணக் காட்டூர் கோயில் நிர் வாகிகள், ஐயப்ப பக்தர்கள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.
*திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 6வது கிராஸ் மணிகண்டன் கோயிலில் 43ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு பூக்குழி வளர்த்தல்,7:15 மணிக்கு சுவாமி ஊர்வலம்,9:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
10:00 மணிக்கு பஜனை, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
10:45 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்குதல், 11:15 மணிக்கு அன்னதானம் நடந்தது.

