/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரை தளத்தில் வங்கிகள், போஸ்ட்ஆபீஸ் , அரசு அலுவலகங்களை மாற்றி அமைக்கலாமே! முதியோர்,மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்ல வசதி செய்யலாமே
/
தரை தளத்தில் வங்கிகள், போஸ்ட்ஆபீஸ் , அரசு அலுவலகங்களை மாற்றி அமைக்கலாமே! முதியோர்,மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்ல வசதி செய்யலாமே
தரை தளத்தில் வங்கிகள், போஸ்ட்ஆபீஸ் , அரசு அலுவலகங்களை மாற்றி அமைக்கலாமே! முதியோர்,மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்ல வசதி செய்யலாமே
தரை தளத்தில் வங்கிகள், போஸ்ட்ஆபீஸ் , அரசு அலுவலகங்களை மாற்றி அமைக்கலாமே! முதியோர்,மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்ல வசதி செய்யலாமே
ADDED : ஜூலை 06, 2024 06:08 AM

-ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள், அரசு அலுவலகங்கள் என மக்கள் பயன் பெறும் அலுவலகங்கள் தரைதளத்தில் இல்லாமல் முதல் ,இரண்டாம் தளங்களில் செயல்படுவதால் முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்வதற்கு முடியாமல் அவதிப்படுகின்றனர். இவற்றை தரை தளத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான வங்கிகள், போஸ்ட்ஆபீஸ் , அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல வங்கிகள் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் குறிப்பிட்ட சில போஸ்ட் ஆபீஸ்கள் , அரசு அலுவலகங்கள் மாடியில் செயல்பட்டு வருகிறது.
வங்கிச் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு வங்கிகளை நாட வேண்டியுள்ளது. தரை தளத்தில் வாடகை அதிகம் கொடுக்க வேண்டும் . செலவினத்தை குறைப்பதற்காக பல வங்கிகள் மாடிகளில் செயல்பட்டு வருகின்றன. முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் மாடியில் உள்ள வங்கிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களும் எளிதில் மாடிக்குச் செல்ல முடிவதில்லை. இதேபோல் மாடிகளில் செயல்படும் போஸ்ட் ஆபீஸ்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த அலுவலகங்களின் சேவைகளை பெற பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் எளிதில் சென்று வர வசதியாக தரை தளங்களில் அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
........
சேவைகளைப் பெறுவதில் சிரமம்
வங்கி கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் வகையில் ஏறக்குறைய அனைவரும் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். ஒரு சிலவற்றை தவிர பெரும்பான்மையான வங்கிகள் மாடிகளில் செயல்படுவதால் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய் பட்டவர்கள் சுலபமாக மாடிப்படிகளில் ஏறி செல்ல முடிவதில்லை. இதனால் வங்கி சேவையை பெற மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் போஸ்ட் ஆபீஸ்கள், சில அரசு அலுவலகங்கள் மாடியில் தான் செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள் பல்வேறு வேலைகளுக்காக வங்கிகளை நாட வேண்டியுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இத்தகைய அலுவலகங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். மக்கள் அதிகம் சென்று வரும் அலுவலகங்களை தரைதளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்வு தளமும் அமைக்க வேண்டும்.
-சி. செந்தில்குமார், அ.தி.மு.க, இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய துணைத் தலைவர், ஒட்டன்சத்திரம் .
.........................