ADDED : டிச 11, 2024 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக திருப்பூர் தனியார் நிறுவனம் சார்பில் பேட்டரி பஸ் வழங்கப்பட்டது.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படுவதில்லை. கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக பேட்டரி கார், பேட்டரி பஸ்களை இயக்கி வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த டிவின்பேட்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பஸ்சை உபயமாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து அதனைப் பெற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். கட்டணம் இல்லா வாகனங்களின் எண்ணிக்கை இதன் மூலம் 25 ஆக உயர்ந்துள்ளது.