sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்

/

வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்

வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்

வரத்து குறைவால் விலை உயர்ந்த பீட்ரூட்


ADDED : டிச 24, 2024 05:08 AM

Google News

ADDED : டிச 24, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, பாவாயூர், காவேரியம்மாபட்டி, அத்தப்பகவுண்டனுார், பெரிய கோட்டை சுற்றிய பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக பயிரிடப்படுகிறது. பல பகுதிகளில் பீட்ரூட்டை அறுவடை செய்யும் பணிகள் முடியும் நிலையில் உள்ளதால் மார்க்கெட்டிற்கு வரத்து மிகவும் குறைந்து விட்டது.

சில நாட்களுக்கு முன்பு தரமான பீட்ரூட் கிலோ ரூ.7க்கு மட்டுமே விற்பனையானது. பீட்ரூட் பறித்தெடுக்க ஒரு நாள் கூலியாக ஒரு நபருக்கு ரூ.350க்கு மேல் கொடுக்கப்பட்டது.

இத்துடன் உரம், பூச்சி மருந்து பராமரிப்பு என பீட்ரூட்டை அறுவடை செய்ய செலவு இன்னும் அதிகரித்தது. காய்கறி மார்க்கெட்டில் கமிஷனும் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் விலையானது விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை.

பீட்ரூட் ஒரு கிலோ ரூ.30க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் விளைச்சல் இல்லாத நேரத்தில் பீட்ரூட் விலை அதிகரித்து கிலோ ரூ.40க்கு விற்பனை ஆனது.






      Dinamalar
      Follow us