ADDED : மே 15, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை; வடமதுரை சிங்காரக்கோட்டை ஸ்ரீபோரம்மாள், காணப்பாடி பெருமாள், பாப்பம்மாள் கோயிலில் பெரிய கும்பிடு திருவிழா 3 நாட்கள் நடந்தது.
பொதி நாட்டுவித்தல், நிலுவை கூடையில் காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், சிவபாதம் பெற்றவர்களுக்கு பொம்மை வைத்தல், சுவாமி மாடுகளுடன் கொத்துக்கொம்பில் இருந்து பருவுவிடுதல் என பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் எம்மேனவாரு குல பங்காளிகள் செய்திருந்தனர்.