/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநிக்கு நாமக்கல் மாவட்ட பக்தர்களின் பறவை காவடி
/
பழநிக்கு நாமக்கல் மாவட்ட பக்தர்களின் பறவை காவடி
ADDED : ஜன 30, 2026 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பக்தர்கள் மூன்று கிரேன்களில் பழநி முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு இவர்கள் இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பறவை காவடி எடுத்து வருவது வழக்கம்.
அதன்படி மூன்று கிரேன்களில் 21 பேர் பறவை காவடி எடுத்து வந்தனர். இவர்களுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பழநி பாலசமுத்திரம் சாலை, அய்யம்புள்ளி வீதி வழியாக கிரிவீதியை சென்று வலம் வந்தனர். அப்போது ஏற்பட்ட வாகன நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

