ADDED : பிப் 18, 2026 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தே.ஜ., கூட்டணி சார்பாக பா.ஜ., தெருமுனை கூட்டம் கீழ் வடம்போக்கி தெரு, பட்டத்து விநாயகர் கோயில் அருகே நடந்தது.
சண்முக நதி சுத்தப்படுத்தி படித்துறை, உடைமாற்றும் அறைகள் அமைத்து தராத அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பழநி மாவட்டமாக மாற்ற கோரிக்கை விடுத்தனர்.
போதை கலாசாரம் பெருகி வருவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. நகர பொதுச்செயலாளர் வீரக்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், நகரத் தலைவர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.

