/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அம்ரித் பாரத் ரயிலுக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு
/
அம்ரித் பாரத் ரயிலுக்கு பா.ஜ.,வினர் வரவேற்பு
ADDED : ஜன 25, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தென்னக ரயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழியே தாம்பரம் வரை ஸ்லீப்பர் பெட்டி வசதியுடன் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்பட்ட ரயில் மாலை 4:50 மணிக்கு திண்டுக்கல் வந்தது.
அங்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பொதுச் செயலாளர் முத்துகுமரன், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலைய ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

