/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் மீது பஸ் மோதல் அண்ணன், தம்பி பலி
/
டூவீலர் மீது பஸ் மோதல் அண்ணன், தம்பி பலி
ADDED : டிச 12, 2024 02:12 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேசெங்குறிச்சி கம்பிளியம்பட்டி அருகே பொத்தகணவாய்பட்டியை சேர்ந்தகூலித் தொழிலாளி சின்னச்சாமி. இவரது மகன் வெள்ளைச்சாமி 21; வேடசந்துார் நுாற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
4வது மகன் வள்ளியப்பன் 13; மார்க்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவர்கள் இருவரும் நேற்று காலை 6:30 மணிக்கு கம்பிளியம்பட்டியில் இருந்து பொத்தகணவாய்பட்டிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை ) சென்றனர்.
மணக்காட்டூர் ரோட்டில் இவர்கள் சென்ற போது எதிரே செந்துறையில் இருந்து பழநி வந்த தனியார் பஸ் டூவீலரில் மோதியதில் அண்ணன், தம்பி பலியாயினர்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.